2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரான ஓ பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யத் துவங்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
நிதிப்பற்றாக்குறை
2017-2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடன் அளவு
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 2016-2017ல் ரூ. 2,62,431 கோடியாக இருந்த நிலையில் 2017-2018ல் ரூ. 3,14,366 கோடியாக அதிகரித்தது நாட்டின் நிதி நிலையை மோசமான நிலைக்குக் கொண்டு வந்தது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாநிலத்தின் கடன் அளவு ரூ. 51, 935 கோடி அதிகரித்தது.
வருவாய்
2017-18ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ. 1,59,363 கோடியாகவும், மொத்த செலவு ரூ. 1,75,293 கோடியாகவும். இதன் மூலம் பற்றாக்குறை ரூ. 15,930 கோடியாகவும் உள்ளது.
இலக்கு
தமிழ்நாட்டு மாநிலத்திற்கு ரூ. 42 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு செய்யவும், இதன் மூலம் வணிக வருவாய் ரூ. 77,234 கோடி வரையில் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கியச் செலவுகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ரூ. 46,332 கோடியாகவும், ஓய்வூதியம் 20,577 கோடி ரூபாயாகவும் உள்ளது.
டாஸ்மாக்
டாஸ்மாக் வருமானம் ரூ. 6903 கோடியாகவும் கடந்தாண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.