டெல்லி: நீண்ட காலமாக ஒழுங்முறைப்படுத்தப்பட்ட அனைத்து நிறுவன ஊழியர்களுக்கு 10 லட்சமாக இருந்து வந்த கிராஜூவிட்டி தொகையினை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் வியாழக்கிழமை மக்களவையில் கடும் அமளிக்கிடையில் கிராஜூவிட்டி மசோதாவானது வெற்றிகரமாகத் தாக்கல் செய்யப்பட்டது.
கூச்சலும் முழக்கமும்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகள் கூச்சல், முழக்கங்களுக்கு இடையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் கிராஜூவிட்டி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர் துறை அமைச்சர்
தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் இன்று மக்களவையில் கிராஜூவிட்டி மசோதாவினை வெற்றிகரமாகத் தக்கல் செய்தார். எனவே மத்திய அரசு 20 லட்சம் வரை கிராஜூவிட்டி உயர்வை அளிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று கங்வார் கூறினார்.
மகப்பேறு கால விடுமுறை
கிராஜூவிட்டி மசோதாவின் கீழ் தற்போது எத்தனை நாள் மகப்பேறு கால விடுமுறை போன்ற விவரங்களையும் மத்திய அரசு வெளியிடும்.
கிராஜுவிட்டி என்றால் என்ன?
கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காகப் பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.
கிராஜூவிட்டி சூத்திரம்
கடைசியாகப் பெற்ற சம்பளம் (அடிப்படை சம்பளம் + அகவிலைப் படி) X பணிபுரிந்த ஆண்டுகள் X 15/26 = கிராஜூவிட்டி தொகை
இந்தச் சூத்திரத்தின் கீழ் கணக்கிடும் போது 5.7 வருடங்கள் என்றால் மொத்தமாக 6 வருடம் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.