இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக் கடனுக்குத் தொடர்புடையவர்களை மத்திய அரசு கண்காணித்து வந்தது மட்டும் அல்லாமல் தற்போது அவர்களை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாத வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது.
91 பேர்
400 நாணயமற்றவர் (wilful defaulters) வழக்கில் தொடர்புடை சுமார் 91 பேரை வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு. இவர்களின் பெயரை வெளியிட வேண்டாம் எனவும் மத்திய அரசு வங்கித்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மோடி நிர்வாகம்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 91 பேர் மீது கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
50 கோடி ரூபாய் கடன்
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரின் மோசடி வெளியான பின்பு வங்கி 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வங்கிக் கடனுக்கு, கடன் பெற்றவர்களின் பாஸ்போர் விபரங்களை வங்கி நிர்வாகம் சேகரித்து வருகிறது.
வெளிநாட்டு தப்பித்தல்..
இதன் மூலம் வங்கிக் கடன் மோசடி செய்து விட்டு ஜத்தின் மேத்தா, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் போல் வெளிநாட்டுத் தப்பிச் செல்ல முடியாது என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
210 பில்லியன் டாலர்
தற்போது இந்திய வங்கிகளில் சுமார் 210 பில்லியன் டாலர் அளவிலான வராக்கடன் உள்ளது. அதிக வராக்கடன் கொண்டுள்ள நாடுகளின் பட்டியில் கடந்த 10 வருடத்தில் இந்தியா சந்தித்துள்ள மாற்றங்களைப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.