தமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதை விட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையை மேம்படுத்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

3,000 பஸ்கள்

3,000 பஸ்கள்

இந்தியாவில் ஏந்தொரு மாநிலத்தைக் காட்டிலும் இந்தியாவில் போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் திராவிடக் கட்சிகளின் தொலைநோக்கு பார்வை என்றால் மிகையாகாது.

இந்நிலையில் 2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். மேலும் 4000 பழைய பேருந்துகளையும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

ஏழைகளுக்கு வீடு

ஏழைகளுக்கு வீடு

தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என 2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

 விவசாயம்
 

விவசாயம்

2018- 19நிதியாண்டில் 10 லட்சம் ஹெக்டேரில் அளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

மருத்துவப் பூங்கா

மருத்துவப் பூங்கா

மருத்துவச் சேவை தரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், செங்கல்பட்டுப் பகுதியில் மருத்துவப் பூங்கா அமைக்கச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சத்துணவுத் திட்டம்

சத்துணவுத் திட்டம்

தமிழ்நாட்டில் கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்திய சத்துணவுத் திட்டத்துக்குச் சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ரூபாய் அளவிலான நிதியை 2018-19ஆம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

மாநிலத்தின் சுகாதாரத் துறையை மற்றும் சேவையை மேம்படுத்துவதற்காக 11,638.44 கோடி ரூபாய் அளவிலான நிதியை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

2017-18ஆம் நிதியாண்டில் ரூ.10,158 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ. 11,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் நடப்பு ஆண்டில் 1,480 கோடி ரூபாய்க் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu govt buying 3,000 news buses for people

Tamilnadu govt buying 3,000 news buses for people
Story first published: Thursday, March 15, 2018, 12:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X