இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் கார்ப்ரேட் நிறுவனங்களை அழைத்து முதலீடுகளைப் பெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு உலக முதலீடாலர் மாநாட்டினை நடத்தி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்தாகி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன.
வேலையில்லா இளைஞர்களுக்குத் திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி. திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு, 2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் ரூ38 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பிரிவுகள் போன்றவை துவங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.