ஏப்ரல் மாதம் முதல் ஆடி கார்கள் ரூபாய் 9 லட்சம் வரை விலை உயர்வு.. காரணம் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2018-2019-ல் மத்திய அரசு சுங்க வரியினை உயர்த்தியுள்ளதால் அதன் தாக்கத்தினைச் சமாளிக்க ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி ஏப்ரல் 1 முதல் தங்களது கார்களின் விலையினை 9 லட்சம் ரூபாய் வரை விலை உயர்த்த உள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் ஆடி கார்கள் ரூபாய் 9 லட்சம் வரை விலை உயர்வு.. காரணம் இது தான்..!

ஆடி நிறுவனம் இந்தியாவில் 35.35 லட்சம் ரூபாய் முதல் 2.63 கோடி ரூபாய் வரை ஆடம்பர கார்களை விற்பனை செய்து வருகிறது. பட்ஜெட் 2018-ஐ தாக்கல் செய்த அருண் ஜேட்லி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், மோட்டார் கார்ஸ், மோட்டார் சைக்கிள்கள் மீது சுங்க வரியினை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் மோட்டார் வாகனங்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்தால் தான் மீதான சுங்க வரியினை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

ஆடி நிறுவனம் தங்களது கார் மடல்களின் விலையினை ஏற்றியுள்ள நிலையில் பிற ஆடம்பர கார் நிறுவனங்களும் வரும் நாட்களில் தங்களது தயாரிப்புகளின் மீது விலை ஏற்றத்தினை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Audi to hike car prices by up to Rs 9 lakh from April

Audi to hike car prices by up to Rs 9 lakh from April
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X