2018 மார்ச் மாதம் வரை தமிழ் நட்டின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது தமிழகப் பட்ஜெட் 2018-2019-ல் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தது மட்டும் இல்லாமல் வரும் ஆண்டு 1,43,962 கோடி ரூபாய் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் கடன் அதிகரித்து வருகிறதே என்று மக்களும் பத்திரிக்கையாளர்களும் கேள்வியினை எழுப்பினால் எல்லாம் திமுக ஆட்சிக் காலத்தில் சரியாகத் திட்டமிடாது தான் என்று அதிமுக அமைச்சர்கள் கூறுவார்கள். அப்படியானால் இவர்கள் கடந்த 7 வருடமாக ஆட்சி செய்து வரும் நிலையில் என்ன செய்தார்கள் என்ற கேள்வி மக்களுக்கு எழும் நிலையில் திமுக ஆட்சிக் காலம் முதல் தமிழக அரசு எவ்வளவு கடன் வைத்து இருந்தது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
2006-2011
திமுக தலைமையிலான அரசு 2006-2011 காலக் கட்டத்தில் ஆட்சியில் இருந்த போது தமிழக அரசின் கடன் தோகை இலவச தொலைக்காட்சி பெட்டி மற்றும் ஒரு ரூபாய் அரிசி திட்டங்கள் போன்றவற்றால் 57,457 கோடியாக இருந்துள்ளது.
2011
2011-ம் ஆண்டு முன்னால் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சமச்சீர் கல்வி புத்தகத்தினை மாற்ற முயற்சி செய்தது, நியாய விலை கடைகளில் இலவசமாக அரிசி வழங்கியது, நட்டம் அடைந்தாலும் குறைந்த விலையில் அனைத்து நகரங்களில் அம்மா உணவகம் துவங்கியது என்ற பல இலவ திட்டங்களைத் தேர்தல் வாஅக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தால் கோடி கணக்கில் செலவு செய்ய வேண்டி இருந்ததால் ஒரே ஆண்டில் தமிழகத்தின் கடன் தொகையானது இரட்டிப்பாகி 1,01,439 கோடியாக உயர்ந்தது.
2012
பின்னர் மீண்டும் 2012-ம் ஆண்டின் பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது ஓ பன்னீர் செல்வம் 1,30,630 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் திமுகத் தான் என்று அதிமுக அரசு கூறிய நிலையில் முந்தைய ஆட்சிக் காலத்தில் மின்சாரத் திட்டங்கள் நிறைவேறாமல் இருந்தது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் தங்கு தடையின்றி மின்சாரம் அளிப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அதற்காகத் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து விலை அதிகமாகப் பணம் கொடுத்து மின்சாரம் வாங்கியது மற்றும் அதில் நடந்த ஊழல் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.
2013
இப்படித் தொடர்ந்து அதிகரித்து வந்த தமிழக அரசின் கடன் அளவாது 2013-ம் ஆண்டுப் பட்ஜெட் தாக்கல் செய்த போது 1,52,810 கோடி ரூபாயாக உயர்ந்தது.
2014
2014-ம் ஆண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழக அரசுக்கு 1,71,490 கோடியாகக் கடன் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.
2015
ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற கூட்டங்களில் 110 விதிகளின் பல நலத்திட்டங்களை அறிவித்து வர 2015-ம் ஆண்டுத் தமிகத்தின் கடன் அளவானது 1,95,290 கோடியாக அதிகரித்தது.
2015-2016
2016-ம் ஆண்டுப் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்தின் கடன் அளவானது 2,11,483 கோடியாக உயர்ந்தது. பின்னர் நடந்த தேர்தலிலும் அதிமுக அரசே ஆட்சிக்கு வந்தது.
2016-2017
ஜெயலலிதாவிற்கு உடல் நலம் சரியில்லால் போனது. 2016-2017 நிதி ஆண்டில் மட்டும் மீண்டும் தமிழகத்தின் கடன் அளவானது 2,47,031 கோடியாக உயர்ந்தது. இடைப்பட்ட காலத்தில் 2016-டிசம்பர் மாதம் ஜெயலலிதா காலமனார்.
2017-2018
ஜெயலலிதா இறந்த பிறகு அவர் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்த இலவச திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் மறு புறம் தமிழகத்தில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறியது புதிய நிறுவனங்கள் வாராதது போன்ற காரணங்களால் வருவாய்ச் சரிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் கடன் தொகை 3,14,566 கோடி ரூபாயாக உயர்ந்தது. அம்மா ஸ்கூட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2018-2019
வரும் நிதி ஆண்டு 1,43,962 கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் என்று தெரியாத நிலை உள்ளது.
வட்டி
இந்தியா பல பின் தங்கிய மாநிலங்களும் தற்போது தங்களது கடன் அளவு மற்றும் வட்டி செலவையும் குறைத்துள்ளன. ஆனால் தமிழக அரசின் கடன் மற்றும் வட்டி சுமையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை வரும் நாட்களில் ஆளும் அதிமுக அரசு குறைக்கப்போகிறதா? அல்லது எதிர்க்கட்சியைச் சாடப்போகிறதா என்று பொருத்து இருந்து பார்க்கலாம்.