2008ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுனர் பால் குருக்மேன் இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தைக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வேலைவாய்ப்பு சந்தையைத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையில் இருக்கும் நிலையில் பால் குருக்மேனின் எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி அடையாவில்லை என்றால் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தைச் சந்திக்கும் எனப் பால் குருக்மேன் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித் துறை
தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தச் சில வருடங்களில் மருத்துவர்கள் கூட இருக்கமாட்டார்கள். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் பாதிப்பு இருக்காத உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டும். இல்லையெனில் உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையைக் கொண்ட இந்தியா மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
ஜப்பான், சீனா
இதுநாள் வரையில் உலக நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கு ஊழியர்களை அளித்து வந்த ஜப்பான் மற்றும் சீனாவில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இந்தியா
இதனால் இந்தியாவிற்கு இதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது. இதனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.