பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி 2018 மார்ச் 31 என்று இருந்த நிலையில் 2018 ஜூன் 30-ம் தேதி வரை தற்போது காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் வருமான வரித் துறை பான் கார்டுன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக டிவிட்டும் போட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
ஆதார் எண்ணை வங்கி கணக்கு, மொபைல் எண் போன்றவற்றில் இணைப்பதற்கான காலக்கெடுவை அன்மையில் உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்ததன் பேரில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையமும் இந்த முடிவை எடுத்துள்ளது.
வருமான வரி தாக்கல்
எனினும் 12 இலக்க ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே வருமான வரியை தாக்கல் செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் புதியதாகப் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
சட்டம்
வருமான வரி சட்டப் பிரிவு 139 AA (2)-ன் கீழ் 2017-ம் ஆண்டு ஜூலை 1 வரை பான் கார்டு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இணைப்புகள்
மார்ச் 5-ம் தேதி வரையிலான தரவுகளின் படி 33 கோடி பான் கார்டு பயனர்களில் 16.55 கோடி நபர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.
முந்தைய கடைசித் தேதிகள்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முன்பு 2017 ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31, மற்றும் 2018 மார்ச் 31 ஆகியவை கடைசித் தேதியாக இருந்தன.
எப்படி இணைப்பது?