இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே துறை மத்திய அரசின் அதீத நிதியுதவியுடன் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 2 குடும்பத் தங்கக்கூடிய வகையில் சொகுசு ரயில் பெட்டி சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி
ஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு கிடைக்கும் வேலெட் சேவை, இந்தியாவில் முதல் முறையாகச் சலூன் கொண்டுள்ள ரயில் சேவையை வெள்ளிக்கிழமை பழைய ரயில்வே நிலையத்தில் துவங்கப்பட்டது.
இதில் 6 பேர் அல்லது 2 சிறு குடும்பங்கள் தங்க முடியும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
பிற வசதிகள்
இந்தச் சிறப்பு ரயில் பெட்டியில் 2 பெட்ரூம், லாஞ்ச், பேன்டரி, பாத்ரூம், சமையல் அறை என ஒரு ஹோட்டலில் இருக்கும் அனைத்தும் இதில் உள்ளது.
5 நாட்கள்
இந்த ரயில் சேவையை அதிகப்படியாக 5 நாள் பெறலாம், இதற்குக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராயல் இந்தியா ரயில்
இத்திட்டத்தின் முதல் பயணம் ஜம்மு வரையில் ஜம்மு மெயில் ரயிலுடன் இணைந்து சென்றுள்ளது. இந்தப் பயணம் சுமார் 4 நாட்கள் பயணமாக உள்ளது. இதுவரையில் இந்தச் சேவை ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதை மக்களுக்கும் அளிக்கத் துவங்கியுள்ளது ஐசிஆர்டிசி.
336 சலூன் பெட்டிகள்
இந்தியா முழுவதும் சுமார் 336 சலூன் வசதிகள் உடன் சுமார் 336 சொகுசு ரயில் பெட்டிகளைக் கொண்டுள்ளது இந்திய ரயில்வே. இதில் 62 பெட்டிகள் மட்டுமே ஏசி வசதிகளைக் கொண்டுள்ளது.