ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்திற்கு வழங்கிய 3000 கோடிக்கும் அதிகமான கடன் ஒப்புதல் அதன் தலைவர் சந்தா கோச்சார் சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டதன் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கான விசாரணை தற்போது துவங்கியுள்ள நிலையில் சந்தா கோச்சார் மீது கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது.
FICCI நிகழ்ச்சி
FICCI பெண்கள் அமைப்பின் வருடாந்திர நிகழ்ச்சி ஏப்ரல் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த சந்தா கோச்சார் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் கலந்துகொள்கிறார்.
நீக்கம்
இந்த நிகழ்ச்சிக்கு அவர் விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் வர மறுத்துவிட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். எனவே FICCI வருடாந்திர நிகழ்ச்சிக்கு அவர் வரமாட்டார் என இந்த அமைப்பின் தலைவர் ரஷ்மி சரிதா தெரிவித்துள்ளார்.
மோசடி
வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வழங்கிய 3,250 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒப்புதலுக்கு இந்நிறுவனத்தின் தலைவர் சந்தா கோச்சார் அவர்களின் கனவருக்குப் பெரிய அளவிலான உதவியைச் செய்துள்ளார். இதற்காக இவ்வளவு பெரிய கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனச் சந்தா கோச்சார் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.