மோடியின் பிரச்சனையைத் தீர்க்க வரும் சீன நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியையும், மோசமான நிலையில் இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையும் மீட்டு எடுக்க மத்திய அரசு பல முயற்சிகளைச் செய்த வரும் நிலையில், சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி இவ்விரண்டையும் காப்பாற்றும் வகையில் ஒரு அறிவிப்பை வெயிட்டுள்ளது.

 

சியோமி

சியோமி

சீனா, அமெரிக்கா உடனான அதிகளவிலான வர்த்தகப் பிரச்சனை சந்தித்து வரும் இந்நிலையில், சீன நிறுவனமான சியோமியின் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு, உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

முதலீடும் வேலைவாய்ப்பும்

முதலீடும் வேலைவாய்ப்பும்

சியோமியின் கோரிக்கையை ஏற்று இதன் தலைமையில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கச் சுமார் 2.5 பில்லியன் டாலர் வரையில் இந்தியாவில் முதலீடாகக் குவியும், 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனச் சியோமி தெரிவித்துள்ளது.

மோடி அரசு
 

மோடி அரசு

சேவைத்துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவை உலக நாடுகளுக்கு உற்பத்தி தளமாக இருக்க வேண்டும் என்ற மைய கருத்தில் துவங்கப்பட்ட மேக் இன் இந்தியா கீழ் வெளிநாட்டு நிறுவனங்களைக் கவர தவறியுள்ள நிலையிலும், நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மோசமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் சியோமியின் அறிவிப்பு மோடி அரசுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கும்.

வரி விதிப்புகள்

வரி விதிப்புகள்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்களுக்கு மீது 10 சதவீத வரியை விதித்தது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் உதிரிப்பாகங்களை இணைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான பின்னடைவு ஏற்பட்டது.

இதன் எதிரொலியாகவே சியோமி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

 

சாம்சங்

சாம்சங்

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், இதன் இடத்தைச் சியோமி பிடிக்கவும், இந்நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களை விநியோகம் செய்யும் 50 சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி நிகழ்ச்சி

டெல்லி நிகழ்ச்சி

டெல்லியில் நடந்த முக்கியமான முதலீட்டு நிகழ்ச்சியில் 50 நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிப்பு பணிகளைத் துவங்கினால் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீடும், 50,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்க முடியும் எனச் சியோமி தெரிவித்துள்ளது.

6 உற்பத்தி ஆலைகள்

6 உற்பத்தி ஆலைகள்

சியோமி மட்டும் இந்தியாவில் 6 ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் வைத்துள்ளது, சீனாவைத் தாண்டி இந்தியாவிலேயே பெரிய அளவிலான சந்தையை வைத்துள்ளது சியோமி.

<strong>சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை ஓடஓட விரட்டும் 'சியோமி'..!</strong>சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை ஓடஓட விரட்டும் 'சியோமி'..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi helping for Modi's Make in India And employment problem

Xiaomi helping for Modi's Make in India And employement problem - Tamil Goodreturns | மோடியின் பிரச்சனையை தீர்க்க வரும் சீன நிறுவனம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Monday, April 9, 2018, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X