ஐபிஎல்-இல் பிசியாக இருக்கும் டோனி முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராகச் சுமார் 150 கோடி ரூபாய்கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.
அமரப்பள்ளி
நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான அமரப்பள்ளி குரூப் நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதிநெருக்கடியில் உள்ளது, சொல்லப்போனால் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி முழுமையாக வீடு கூடக்கட்டித்தர முடியாத நிலையில் இந்நிறுவனம் உள்ளது.
டோனி
அமரப்பள்ளி நிறுவனத்திற்குப் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த டோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி பணத்தை அளிக்காதகாரணத்தினால் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி சுமார் 150 கோடி ரூபாயை அமரப்பள்ளி வழங்கவேண்டும்.
ரிதி ஸ்போர்ட்ஸ்
இந்நிறுவனம் தோனி, கேஎல் ராகுல், புவனேஷ்வர் குமார் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோரை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமரப்பள்ளி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
இதில் அமரப்பள்ளி பிராண்டிங் மற்றும் மார்கெட்டிங் செய்ததற்கான பணத்தை அளிக்கவில்லை என்று 200 கோடி ரூபாய்கோரி வழக்குப் பதிவு செய்துள்ளது.
7 வருடங்கள்
அமரப்பள்ளி நிறுவனத்திற்குச் சுமார் 6-7 வருடங்களாக டோனி பிராண்ட் அம்பாசிட்டராக இருந்துள்ளார். கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
வாடிக்கையாளர்
இக்காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட அமரப்பள்ளி வாடிக்கையாளர்கள் பலர் டிவிட்டரில் டோனியை டேக் செய்துநிறுவனத்தை வறுத்தெடுத்தனர்.
9 கோடி ரூபாய் வில்லா
2016இல் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த அனைத்து வீரர்களுக்கும் நொய்டாவில் இருக்கும் அமரப்பள்ளி டிரீம் வேலிதிட்டத்தில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான டிசைன் அப்பார்ட்மென்ட்-ஐ வழங்கியது.
இதில் டோனிக்கு மட்டும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வில்லாவும், மற்ற வீரர்களுக்கு 55 லட்சம் ரூபாய் மதிப்பிலானவில்லாவும் கொடுக்கப்பட்டது.