மாநில அரசு மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் கோவாவை சுற்றுலாவுக்கு முக்கிய இடமாகவும், போக்குவரத்து மையமாகவும் மேம்படுத்த மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
தாபோலிம் விமானநிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் சந்தித்த சுரேஷ் பிரபு மோப்பா விமான நிலையம் 2020 செப்டம்பர் வாக்கில், செயல்பாட்டுக்கு வரும். மோப்பாவுடன் சேர்ந்து தாபோலிம் விமான நிலையமும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதுப்பிப்பு பணிகள்
ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாபோலிம் விமானநிலைய புதுப்பிப்பு பணி நிறைவடைந்து, ஜூலை மாதத்தில் புதிய பல அடுக்கு வாகன நிறுத்த வளாகத்துடன் செயல்பாட்டுக்கு வரும்.
தாபோலிம் விமான நிலையத்தில் ஒரு பகுதி டாக்சி சேவைகளைச் செயல்படுத்துவதற்காக கோவா சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படும்.
விவசாயிகளுக்கு உதவி
ஒரு பகுதி உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்காக மாநில அரசுக்கு ஒதுக்கப்படும்.
சர்வதேச சந்தைக்கு எளிதாகச் சென்றடைய சரக்குப் போக்குவரத்து விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று திரு. சுரேஷ் பிரபு கூறினார். இரண்டு விமானநிலையங்களைக் கோவா பெறும்போது, பயணிகளைக் கையாளும் திறன் மூன்று கோடியாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இராணுவ விமான தளம்
தாபோலிம் விமான நிலையமானது இராணுவ விமான தளமாகும். அதனையே பயணிகள் விமான நிலையமாகவும் பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதால் புதிதாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.