கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பண தட்டுப்படு ஏற்பட்டு வந்ததாகச் செய்திகள் வெளியான நிலையில் நேற்று முதல் அதிரித்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கையின் போது செய்தது போன்று பல வங்கி ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்டளவில் மட்டுமே பணத்தினை எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைச் செவ்வாய்க்கிழமை காலை நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் ஒப்புக்கொண்ட நிலையில் பணதட்டுப்பாடு குறித்த உன்மையினை பாரத ஸ்டேட் வங்கி தலைவரான ரஜினிஷ் குமார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் "பணதட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற ஒரு உளவியல் ஆய்வு தான் இது" எனவும் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறது
எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் பணதட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி ஏதுமில்லை, பயப்பட வேண்டாம், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு நாட்டில் 17.98 லட்சம் கோடி ரூபாய் ரொக்க பணம் புழக்கத்தில் இருந்தது. இதுவே 2018 மார்ச் மாதம் 18.29 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார்.
எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் பெரிய அளவில் பணதட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், 88 சதவீத ஏடிஎம் மையங்களில் பணம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அதிலும் சில ஏடிஎம் இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்காமல் இருக்கிறது என்றும் கூறினார்.
ஆர்பிஐ
ஆர்பிஐ எப்போது விநியோகித்து வந்தது போல இல்லாமல் கடந்த சில மாதங்களாக ரொக்க பண விநியோகத்தினைக் குறைத்து வருகிறது. அதே நேரம் ரொக்க பணப் பரிமாற்றம் உயர்ந்து வருகிறது என்றார்.
உளவியல் ஆய்வு
எனவே மக்கள் ரொக்க பணமாகப் பரிவர்த்தனை செய்து வந்தாலும் அவை வங்கிகளுக்குத் திரும்பி வரப்போகின்றன. அதனால் ரொக்க பணமாக மக்கள் கைகளில் பணத்தினை வைத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் அளவில் வளர்ந்துள்ள நிலையில் இது ஒரு பணதட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற ஒரு உளவியல் ஆய்வு தான் என்றார்.
வங்கி டெபாசிட்
வங்கி டெபாசிட் மீதான வட்டி விகித குறைப்பு, பரிவர்த்தனை கட்டணங்கள் போன்றவை வங்கிகளின் வர்த்தகத்தினைப் பொருத்து மாறும். அதையும், பணத்தட்டுப்பாட்டையும் ஒப்பிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள்
இதனிடையில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் போது, ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம் விதித்து அதனை வாடிக்கையாளர்களுக்குத் தரலாமே, அது எங்கள் பணம் தானே என்றும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.