2017ஆம் ஆண்டின் இந்தியா பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி எனப் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நாட்டின் வர்த்தகச் சந்தை மற்றும் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆனாலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 2.6 டிரில்லியன் டாலர் என அளவை அடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா
2017ஆம் ஆண்டில் 2.5 டிரில்லியன் டாலர் என்ற நிலையைத் தாண்டி இந்தியா பிரான்ஸ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
வழக்கம்போல் முதல் இடத்தில் அமெரிக்கா இடம்பெற்றது. அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகள் முதல் 5 இடத்தைப் பிடித்தது.
சிறப்பான வளர்ச்சி
இந்தியாவின் 2.6 டிரில்லியன் டாலர் ஜிடிபி சிறப்பான வளர்ச்சி அளவீடு என நிதியைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக வங்கி
சமீபத்தில் உலக வங்கி இந்தியா பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பில் இருந்து மீண்டு இந்தியா 2018ஆம் ஆண்டில் 7.3 சதவீதமும், 2019இல் 7.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது.
ஏடிஎம்
இத்தகைய சாதகமான சூழ்நிலையில் தான் வங்கி ஏடிஎம்களில் பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் இல்லாதது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
டிவிட்டர் மழை
ஏடிஎம்களில் பணமில்லா பிரச்சனை மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கிய நிலையில் மக்கள் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டது உங்களின் பார்வைக்கு.