மும்பையில் செயல்பட்டு வரும் சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை 1,000 ரூபாய் ஆக இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை குறைத்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டி கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு, நடப்பு வங்கி கணக்கு என இரண்டிலும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் சிட்டி கூட்டுறவு வங்கியினைக் கடன் அளிப்பது அல்லது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தினை டெபாசிட்டாகப் பெறவும் ஆர்பிஐ தடை விதித்துள்ளது. சிட்டி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் கடன் பெற்று அதிகளவில் வாரா கடனாக வைத்துள்ளதால் ஆர்பிஐ இந்தத் தடையினை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் சிட்டி கூட்டுறவு வங்கி தங்காளது நிதி நிலைமையினைச் சரி செய்யும் வரை தொடர்ந்து தனது வங்கி சேவைகளை வழங்க ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. சூழ்நிலையினைப் பொருத்து இந்த விதியில் ஆர்பிஐ மாற்றம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்டி கூட்டுறவு வங்கியானது சிவசேனா எம்.பி. ஆனந்தராவ் வித்தொபா அட்சுலுக்குச் சொந்தமானது ஆகும்.