டெல்லி: டெல்லி சிறப்புக் காவல் துறையினர் சனிக்கிழமை போலியான பெயரில் பிட்காயின் இணையதள நடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர்.
தீபக் ஜங்ரா மற்றும் தீபக் மல்ஹோத்ரா என்ற இருவரும் போலியாகப் பிட்காயின் திட்டத்தினை ஒன்றை வெளியிட்டு அதிக லாபம் அளிப்பதாக விளம்பரம் செய்து மோசடி செய்ததின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி இணையதளம்
போலியாக www.bitmineplus.org என்ற இணையதளத்தினை உருவாக்கி இருவரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருத்தாக இந்த இணையதளத்தில் குறிப்பிட்ட நிலையில் பிட்காயின் மைனிங் மற்றும் டிரேடிங் மூலமாக அதிக லாபத்தினை அளிப்பதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதிக லாப ஆசை
இவர்கள் வெளியிட்டுள்ள திட்டத்தின் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 12 சதவீஹம் வரை லாபம் கிடைக்கும் என்றும், மாதம் தோறும் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், பிறரைக் கணக்கு திறக்கு பரிந்துரைத்து அதற்கும் பணம் பெறலாம் என்று எல்லாம் விளம்பரம் செய்துள்ளனர்.