ரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் வழங்கப்படுவதில் பெரிய அளவில் தாக்கம் இல்லை என்பதால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி உள்ளூர் ரயில் டிக்கெட் வாங்கும் முறையினை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இந்தியன் ரயில்வேஸ் இந்தத் திட்டத்தினை மும்பையில் முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வரும் பணிகளில் இறங்கி உள்ளது.
மத்திய ரயில்வே
மத்திய ரயில்வே கோட்டத்தில் 25 சதவீத டிக்கெட்கள் ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகிறது. இதுவே வடக்கு ரயில்வே கோட்டத்தில் 18 சதவீத டிக்கெட்கள் ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகிறது.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொழில்நுட்பம்
ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூல டிக்கெட் பெறும் தொழில்நுட்பத்தினைப் புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ரயில்வே நிர்வாகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதிலும் உள்ள பல முக்கிய ரயில் நிலையங்களில் ஆட்டோமேட்டிக் டிக்கெட் விநியோக இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் டெபிட் மற்றும் கிரெட்ட் கார்டுகள் சேவையினை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் கார்டுகள்
பல ரயில் நிலையங்களில் தற்போது உள்ள ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் வாங்கும் முறையினை ஊக்குவிக்க முன்னால் ரயில் ஊழியர்களை அவர்களது கார்டுகள் மூலமாக டிக்கெட் விநியோகிக்கும் முறையினை மேலும் ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு
அது மட்டும் இல்லாமல் அனைத்து மண்டல இரயில்வே நிர்வாகங்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் விநியோகிக்கும் முறை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.