புதுச்சேரியில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவின்படி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறை 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
எப்போது முதல் இ-வே பில் முறை அமலுக்கு வந்தது?
ஏப்ரல் 20, 2018-ன் நிலவரப்படி மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு இ-வே பில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது?
ஏப்ரல் 22, 2018 வரை ஒரு கோடியே எண்பத்து நான்கு லட்சத்திற்கும் மேலான மின்னணு வே-பில்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
புதியதாக எந்த மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்கு வந்துள்ளது?
ஏப்ரல் 25, 2018 ஆம் தேதி முதல் புதுச்சேரி, அருணாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இன்னும் நேரம் எடுக்கும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
ஜிஎஸ்டி இ-..." data-gal-src="http:///img/600x100/2018/04/gstewaybill1-1524551205.png">