ஐடி ஊழியர்கள் வசதியான பணி வாழ்க்கையை அனுபவித்தாலும், அவர்களுக்கு மன அழுத்தம் மிகவும் அதிகம். தற்போது இந்த மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும் வையில் ஐடி ஊழியர்கள் மத்தியில் புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.
என்ன பிரச்சனை..?
ஐடி ஊழியர்களுக்கு அதிகமான இருந்தாலும், பெரும்பாலான சம்பள பணம் வேரியபில் பே-ஆகக் கொடுக்கப்படுகிறது. இதை மைய புள்ளியாகி நிறுவனங்களும் ஊழியர்களின் வேலைத் திறன் அதிகரிக்கவும், ஊழியர்கள் வெளியேறுவதையும் குறைக்கிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒற்றை இலக்க ஊதிய உயர்வை மட்டுமே அளிக்கிறது.
கொந்தளிப்பு
இது தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் கடுமையான கோபத்தை உருவாக்கி வருகிறது.
நிரந்தர ஊதியத்தில் குறைவான ஊதிய உயர்வு அளிப்பதும், காலாண்டு போன்ஸ் தொகைக்காகக் காத்திருப்பதை வெறுக்கத் துவங்கியுள்ளனர் ஐடி ஊழியர்கள்.
சமுக வலைத்தளம்
அமெரிக்கா கடுமையான விதிகளை விதித்தும் கூட இந்தியா ஐடி நிறுவனங்கள் சிறப்பான லாப அளவீடுகளை அறிவித்து வரும் இந்நிலையில் ஒற்றை இலக்க சம்பள உயர்வு குறித்து ஐடி ஊழியர்கள் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
டிசிஎஸ்
சமுக வலைத்தளத்தில் பரவும் செய்திகளில் ஒன்று உங்கள் பார்வைக்கு, பேஸ்புக்கில் இருக்கும் டிசிஎஸ் கன்பெஷன் பேஜ்-இல் பதிவிட்ட செய்தி இது.
100 பில்லியன் டாலரைத் தொட்டதற்கு டிசிஎஸ் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. ஆனால் ஊதிய உயர்வு சதவீதத்தை மறந்துவிடாதீர்கள். என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மற்றொருவர், புலம்ப வேண்டாம் நிறுவனத்தின் வெளியேற்ற விகிதத்தை உயர்த்துங்கள் போது. என்று தெரிவித்துள்ளார்.