நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் எல்ஐசி பல கோடி மக்களின் வாழ்வையும், குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில் 2018ஆம் நிதியாண்டில் எப்போதும் இல்லாத வகையில் பிரிமீயம் தொகை வசூலில் சாதனை படைத்துள்ள எல்ஐசி.
2018ஆம் நிதியாண்டில் முதல் முறை பிரிமீயம் செலுத்துவோர் தொகை மட்டும் 13.46 சதவீதம் வரையில் அதிகரித்து பிரீமியம் தொகை வசூல் 1,34,551.68 கோடி ரூபாய் அளவிலான தொகையை பிரிமீயமாக வசூல் செய்துள்ளது எல்ஐசி.
இதுவரை எல்ஐசி இவ்வளவு அதிகமான தொகையை வசூல் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் எல்ஐசி சுமார் சதவீத சந்தை வர்த்தகத்தை தன்னிடம் கொண்டு மிக்பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்துகிறது.
அதேபோல் புதிய பாலிசிகளை விற்பனை செய்யும் சந்தை வர்த்தகத்தில் எல்ஐசி 75.67 சதவீத சந்தை கொண்டுள்ளது.