இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை மேம்படுத்த உபர் நிறுவனத்தைப் போல இயங்க முடிவு செய்துள்ளது.
கார்கோ புக்கிங்
இதன் படி ஆல்கார்கோ நிறுவனம் ஈசியூ வோல்டுவையிடு என்னும் நிறுவனத்துடன் இணைந்து உலகளாவிய சந்தையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் விதமாக உபர் நிறுவனம் பயன்படுத்தும் திட்டத்தை ஆல்கார்கோ பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் டாக்ஸி-ஐ புக் செய்வது போல் கப்பல் சேவையையும் புக் செய்ய இந்த முயற்சி வழிவகுக்கும்.
தொடர் சரிவு
ஆல்கார்கோ நிறுவனம் கடந்த 5 காலாண்டுகளில் 4 காலாண்டில் லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலையை மாற்ற, தொழில்நுட்ப உதவியுடன் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய போக்குவரத்துத் துறை
இந்தியாவில் தற்போது சரக்கு போக்குவரத்துத் துறை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 19 இடங்களைக் கடந்து 35வது இடத்தில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்தியா உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
டிஹெச்எல்
இந்நிலையில் இந்த வாய்ப்பைச் சிறப்பான முறையில் போட்டிபோட்டு சர்வதேச நிறுவனமான டிஹெச்எல் நிறுவனத்துடன் போட்டி போட ஆல்கார்கோ முடிவு செய்துள்ளது.