6 மாதம் முதல் 1 வருடத்திற்கான சிறந்த முதலீடு திட்டம் இதுதான்.. லாபம் அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும்பாலான மக்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். தேவைக்கு அதிகமான பணம் இருக்கும் சூழ்நிலையில் 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சேமிக்கக் கூடிய முதலீட்டு விருப்பங்கள் சந்தையில் உள்ளன.

இப்படிச் சேமிக்கும் பணத்தை வீடு அல்லது வாகனம் வாங்கும்போது ஆரம்பக் கட்டணமாகச் செலுத்தலாம். இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப குறுகிய கால முதலீடுகள் நல்ல பலனைத் தருகின்றன. ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான காலத்திற்கு ஏற்றச் சிறந்த முதலீடுகள் தேர்வுகள் உங்கள் பார்வைக்கு.

 திரவ நிதி : (Liquid funds)

திரவ நிதி : (Liquid funds)

இவை ஒரு பாதுகாப்பான நிதியாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், வைப்புச் சான்றிதழ் அல்லது அரசு பத்திரங்களில் இத்தகைய முதலீடுகளைச் செய்யலாம். எந்த ஒரு நேரத்திலும் இந்தத் திட்டத்திலிருந்து நீங்கள் வெளியேற முடியும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உங்கள் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்குத் திரவ நிதி ஒரு சிறந்த வகை ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு 5 முதல் 8 சதவிகிதம் வட்டியும் கிடைக்கும். அதன் வரி செலுத்துதல் செயல்முறை மற்ற கடன் நிதிகள் போன்றது, நீங்கள் 3 வருடங்களுக்கும் மேலாக நிறுத்தும்போது, நீங்கள் குறியீட்டு நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் வரி விதிப்பு வரம்பை விடக் குறைவாக வரி விதிக்கப்படுகிறது.

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு என்பது மற்றொரு பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்கள் பணத்தை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான வட்டி விகிதம் 4 முதல் 7 சதவிகிதம் வழங்கப்படுகிறது. உண்மையில், பலரும் சேமிப்புக் கணக்கில் தங்கள் பணத்தைச் சேமிப்பதற்குக் காரணம், அது திரவ நிலையில் இருப்பது தான். அதிக வட்டியை விரும்பி சேமிப்புக் கணக்கை தொடங்குபவர்கள் யாரும் இல்லை.

லிக்விட் ப்ளஸ் நிதி

லிக்விட் ப்ளஸ் நிதி

இவை அல்ட்ரா குறுகிய கால நிதிகளாகவும், திரவ நிதிகளுடன் ஒப்பிடும் போது அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால், லிக்விட் ப்ளஸ் நிதிகளின் முக்கிய இலக்கு முதலீடு என்பது குறுகிய காலக் கடன் பத்திரங்கள் ஆகும், பொதுவாக 90 நாட்கள் முதல் 1.5 ஆண்டுகள் வரை இதன் காலம் இருக்கும்.

நீங்கள் முதிர்ச்சிக்கு முன்னர் லிக்விட் ப்ளஸ் நிதியை திரும்பப் பெறும்போது, வெளியேறும் தொகையைச் செலுத்த வேண்டும் முதலீட்டாளர்கள் கடன் நிதிகளைப் பொறுத்த வரையில் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும், முதிர்ச்சி காலம் நீளமாக இருக்கும்போது, வட்டி விகிதத்திற்கான அபாயமும் அதிகமாக இருக்கும். கடன் மதிப்பீடு குறைவாக இருந்தால், இயல்புநிலை ஆபத்து அதிகமாகும்.

 

குறுகிய கால நிதி :

குறுகிய கால நிதி :

குறுகிய கால நிதி என்பது பொதுவாகப் பத்திரங்களில் முதலீடு செய்வதாகும். இதன் முதிர்ச்சி காலம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கும். இதன் நீளமான முதிர்வு காலத்தினால், இவற்றில் சற்று அதிகமான அபாயங்கள் உண்டு.

 நடுவர் நிதி :

நடுவர் நிதி :

இந்த நிதிகள் ஒரு வகையான சமபங்கு நிதிகள் ஆகும் , மற்றும் ஒரு சந்தையிலிருந்து பத்திரங்களை வாங்கவும், மற்றொரு இடத்தில் அதிகமான விலையில் விற்பதும் வழக்கமான முறையாகும்.

இதனால் இந்த வகையில் அதிக லாபம் பெறலாம். அபாயமும் இல்லாதது. மற்றும் முதலீட்டில் 8 சதவிகிதம் திரும்பப் பெரும் முறையும் உள்ளது. ஒரு வருடத்திற்கு மேல் சேமித்து வைக்கும்போது, வரிக்கு உட்பட்டும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

 

வங்கியில் நிலையான வைப்பு நிதி :

வங்கியில் நிலையான வைப்பு நிதி :

பல முதலீட்டாளர்களுக்கு இது ஒரு எளிதான தேர்வாக உள்ளது. நீங்கள் எந்த வங்கியிலும் இந்த வசதியைப் பெற முடியும், உங்கள் சேமிப்பு கணக்கின் இணைய வங்கியினை நீங்கள் அணுகினால், நீங்கள் நிலையான வைப்புத்தொகைகளை (FDs) ஆன்லைனில் உருவாக்கலாம்.

முதிர்ச்சி காலத்திற்குப் பிறகு அல்லது இடையில் பணத்தைத் திரும்பப் பெறும்போது, உங்கள் சேமிப்புக் கணக்கில் உங்கள் தொகையைப் பெறலாம். முதிர்ச்சி காலம் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை இருக்கும்.

 

நிலையான முதிர்வுத் திட்டங்கள்:

நிலையான முதிர்வுத் திட்டங்கள்:

மியுச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிலையான முதிர்வுத் திட்டங்களை வெளியிடுகின்றன. பொதுவாக அவற்றின் முதிர்ச்சிக் காலம் 1-3 ஆண்டுகள் ஆகும். இவை நிலையான வைப்பு நிதியைப் போன்றவை தான். ஆனால் இதன் வருவாய், வைப்பு நிதியை ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது. முதலீடு செய்யப்பட்ட பத்திரங்களில் முதிர்ச்சித் தொகை முதலீடு செய்த நிதிக்குச் சமமாக அல்லது குறைவாக இருப்பதால் இதில் வட்டி விகிதத்திற்கான அபாயம் இல்லை.

தொடர் வைப்பு நிதி :

தொடர் வைப்பு நிதி :

இது மற்றொரு நிலையான முதலீடு ஆகும், இது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்குச் சிறந்தது. இதன் முதிர்ச்சிக் காலம் குறைந்தது ஆறு மாதம் முதல் அதிக பட்சம் 10 வருடங்கள் வரை உள்ளது.

தபால் துறை கால வைப்பு நிதி :

தபால் துறை கால வைப்பு நிதி :

தபால் அலுவலகக் கால வைப்பு வங்கியின் நிலையான வைப்பு நிதிகளுக்கு ஒத்திருக்கிறது, மேலும் அவை 7 முதல் 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இவை மிகவும் பாதுகாப்பானது. இந்திய அரசாங்கம் இந்த வைப்பு நிதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் நடத்தும் வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இந்த நிறுவனங்கள் தொடக்கத்தில் நல்ல வட்டி விகிதங்களை வழங்கலாம். ஆனால் வரும் ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.

முடிவுரை:

முடிவுரை:

உங்கள் தேவைக்கு ஏற்றச் சரியான முதலீட்டு விருப்பங்களைத் தேர்வு செய்யுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று நீங்கள் கருதினால், சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு நிதி, நிலையான வைப்பு நிதி, அல்லது தபால் துறை கால வைப்பு போன்ற திட்டத்தில் முதலீடு செய்யலாம். உங்களால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்று தோன்றினால் மற்ற விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். வரி விதிப்புகள் பற்றியும் முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Investment Options for 6 Months to 1 Year

Best Investment Options for 6 Months to 1 Year
Story first published: Friday, May 4, 2018, 10:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X