வால்மார்ட் நிறுவனம் புதன் கிழமை பிளிப்கார்ட் நிறுவனத்தின் 20 பில்லியன் டாலர் பங்குகளில் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வால்மார்ட் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
முதல் முறை
அமெரிக்க நிறுவனம் ஒன்று ஒரு இந்திய ஆன்லைன் நிறுவனத்தினை இவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
பேச்சுவார்த்தை
வால்மார்ட் - பிளிப்கார்ட் இடையிலான பேச்சுவார்த்தை 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்மார்ட் - அமேசான்
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக இருந்து வந்த பிளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியதை அடுத்து அமெரிக்க நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் இடையில் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா ரீடெய்ல் சந்தை
உலகளவில் அனைவரையும் ஈர்க்கும் மிகப் பெரிய ரீடெய்ல் சந்தையாக இந்தியா உள்ளதாக வால்மார்ட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியா டக் மக்மில்லன் குறிப்பிட்டுள்ளார். பிளிப்கார்ட் - வால்மார்ட் இடையிலான ஒப்பந்தில் கையெழுத்திட இவர் இந்தியா வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது மட்டும் இல்லாமல் கூடுதலாக 2 பில்லியன் டாலர் வரை 2018-ம் ஆண்டு முதலீடு செய்து இருப்பதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது.
சாப்ட் வாங்கி
வால்மார்ட்டுக்கு அடுத்தபடியாக ஜப்பானின் சாப்ட் வங்கி வசம் பிளிப்கார்ட்டின் 23 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.