அமெரிக்காவின் மிகப் பெரிய ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் யூகே என வெளிநாட்டில் கடையை விரித்த இடங்களில் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பல அதிரடி திட்டங்களுடன் களம் இறங்கியுள்ளது.
வால்மார்ட்டிற்கு இந்தியாவில் 21 கடைகள் தற்போது உள்ள நிலையில் அடுத்து வர இருக்கும் 4 முதல் 5 வருடத்தில் கூடுதலாக 50 கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாக இந்திய தலைமை நிர்வாக அதிகாரியான கிரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
2018
2018-ம் ஆண்டில் முதற்கட்டமாக 5 கடைகளைத் திறக்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு 12 முதல் 15 கடைகளைத் திறக்க இருப்பதாகவும் கிரிஷ் ஐயர் குறிப்பிட்டது மட்டும் இல்லாமல் இந்திய கடைகள் எல்லாம் லாபத்தில் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
வால்மார்ட்
இந்தியாவில் தற்போது வால்மார்ட்டிற்கு 9 மாநிலங்கள் மற்றும் 19 நகரங்களில் கடைகளைத் திறந்துள்ள நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
வால்மார்ட்-பிளிப்கார்ட்
வால்மார்ட் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட பொருட்களை மொத்த விலையில் தனது கடைகள் மூலமாக விற்பனை செய்து வரும் நிலையில் புதன்கிழமை வால்மார்ட் வெற்றிகரமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை 14 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது மட்டும் இல்லாமல் 2 பில்லியன் டாலர் தொகையினை முதலீடாகச் செய்ய உள்ளது.
எப்டிஐ
இந்திய ரீடெயில் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து கடைகளைத் திறக்கின்றன என்றால் அந்த நகரத்தில் குறைந்து 10 லட்சம் வரை மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.