மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா 2018ஆம் நிதியாண்டு வர்த்தகத்தில் பல மாற்றங்களைச் செய்யப்பட்ட நிலையில் வருவாயில் மட்டும் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் அதிகப் பயணிகள் கொண்டு வழித்தடத்தை முக்கியதுவப்படுத்திச் சேவைகள் அளிக்கப்பட்டுள்ளது, விமான இயக்க நேரத்தை அதிகரிக்கப்பட்டுள்ளது, தினசரி அதிக முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் வாயிலாகவே வர்த்தகம் அதிகரித்துள்ளது.
தற்போது விமான இயக்கத் தரத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவையில் அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படத் திட்டமிட்டுப்படு வருகிறது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஏர் இந்தியா தலைவர் பிரதிப் சிங் தெரிவித்துள்ளாக்
கடந்த வருடம் 3,000 கோடி ரூபாய் அளவிலான வருமானம் பெற்ற ஏர் இந்தியா 2018ஆம் நிதியாண்டில் இதன் அளவு 20 சதவீதம் அதிகரித்து 3,600 கோடி ரூபாய் அளவிலான உயர்வை அடைந்துள்ளது.
ஆனால் ஏர் இந்தியாவின் செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் லாபத்தை அடைய முடியவில்லை.