இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ்-ல் வகித்து வந்த போர்டு உறுப்பினர்களின் தலைவர் பதவியில் இருந்து ரவி வெங்கட்டஷன் வெள்ளிக்கிழமை ராஜினாமா சேர்ந்ததை அடுத்து அவர் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஒரு ஆண்டுஆக ரவி வெங்கடேஷனுக்குப் பல ஆஃபர்கள் வந்துள்ளதாகவும் அதில் முக்கியமான ஒன்று அமேசான் என்றும் இது குறித்து விவரங்கள் அரிந்த நபர் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தில் ஏற்கனவே ரவி வெங்கடேஷன் பணிபுரிந்துள்ள நிலையில் தற்போது அவருக்குப் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்தும் அழைப்பு வந்துள்ளது எனக் கூறுகின்றன. ஆனால் இது குறித்த மின்னஞ்சலுக்கு ரவி வெங்கடேஷன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
அமேசான்
ரவி வெங்கடேஷன் குறித்த தகவல்கள் குறித்து அமேசான் செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது வதந்திகள் குறித்துக் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
அமேசான் இந்தியா
இந்திய இ-காமர்ஸ் சந்தையில் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமேசானின் இந்திய தலைமை செயல் அதிகாரியாக அமித் அகர்வால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
அமேசான் இந்தியாவில் அன்மையில் 5 பில்லியன் டாலரினை முதலீடு செய்ய உள்ளதாக ஜெப் பிஸோஸ் தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு என்று இது வரை போர்டு குழுவை நியமிக்காமலும் உள்ளார்.
வால்மார்ட் - பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தினை அமெரிக்காவின் வால்மார்ட் வாங்கியுள்ள நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு இது மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. எப்படியாவது இந்தியாவில் நம்பர் 1 இ-காமர்ஸ் நிறுவனமாக வளர வேண்டும் என்ற அமேசானின் கனவிற்கு மிகப் பெரிய தடையாக வால்மார்ட் வந்துள்ளது.