விப்ரோ நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரரான அசிம் பிரேம்ஜி 2014-ம் ஆண்டு முதன் முதலில் 25 மில்லியன் டாலரினை முதலீடு செய்தார். பின்னர் அந்த நிறுவனத்தினைப் பிளிப்கார்ட் வாங்கியது. அதனை அடுத்துத் தற்போது பிளிப்கார்ட்டினை வால்மார்ட் வாங்கியதை அடுத்து அதுவே 130 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஏன் இந்த் ரிஸ்க்?
ஆனால் இந்த முதலீட்டைச் செய்ய அசிம் பிரேம்ஜி விவாதித்த போது ஏன் ரிஸ்க் என்று இவருக்குக் கேள்வி எழுந்தாலும் இவருக்குப் பல மடங்கு லாபம் இப்போது கிடைத்துள்ளது.
சில வாரங்களில் உயர்ந்த மதிப்பு
மிந்த்ரா நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜி முதலீடு செய்த சில வாரங்களில் 1.6 பில்லியன் டாலராக மதிப்பிட்டுப் பிளிப்கார்ட் நிறுவனம் மிந்த்ராவை வாங்கியது. 2015-ம் ஆண்டுப் பிளிப்கார்ட்டின் மதிப்பு 15.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.
பிரேம்ஜி இன்வெஸ்ட்
பிரேம்ஜி இன்வெஸ்ட் இவரது 3 பில்ல்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களையும் பங்கு சந்தை முதலீடுகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய குடும்ப முதலீட்டு நிறுவனமாக இது உள்ளது. மேலும் பிரேம்ஜி இன்வெஸ்ட் 6 பில்லியன் டாலரினை இலக்காக வைத்து தனது பயணத்தினைத் தொடர்கிறது.
பிரேம்ஜி இன்வெஸ்ட் உடன் இது குறித்துத் தொடர்புகொண்ட போது தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். அசிம் பிரேம்ஜி ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 152 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு
அதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜி இன்வெஸ்ட் லென்ஸ்கார்ட் கண் கண்ணாடி நிறுவனம் மற்றும் பாலிசி பஜார் உள்ளிட்ட நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பிளிப்கார்ட் - வால்மார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து வெற்றிகரமாக வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.