உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர், கிண்டல் போன்றவற்றையும் தயாரித்து விற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ராஜிநாமா செய்தால் ஒரு ஆண்டுச் சம்பளம் அதாவது 3.4 லட்சம் ரூபாய் வரை அளிப்பதாக ஊழியர்களை மூலை சலவை செய்து வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது.
1.36 லட்சம் முதல் 3.4 லட்சம் ரூபாய் வரை
அமேசான் நிறுவனம் குறைந்தது 1.36 லட்சம் முதல் 3.4 லட்சம் ரூபாய் வரை ஊழியர்களைப் பெற்றுக்கொண்டு விருப்பத்துடன் ராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் சில ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள்.
மீண்டும் அமேசானில் வேலை இல்லை
ஊழியர்கள் பணத்தினைப் பெற்றுக்கொண்டு சென்று விட்டால் அவர்களால் மீண்டும் எப்போதும் அமேசான் நிறுவனத்தில் பணிக்கு சேர முடியாது என்று கூறுகின்றனர்.
ராஜிநாமா செய்தால் பணம்
ராஜிநாமா செய்தால் பணம் என்ற திட்டத்தினை முதன் முதலில் ஜேப்போஸ் இ-காமர்ஸ் நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது. பின்னர் அந்த நிறுவனத்தினை அமேசான் 2009-ம் ஆண்டு வாங்கிய பிறகு 2014-ம் ஆண்டு ஜெப்பிசோஸ் இதனை மீண்டும் அமேசானில் அறிமுகம் செய்துள்ளார்.
அமேசான்
அமேசான் நிறுவனத்திற்கு ஊழியர்கள் பணத்தினைப் பெற்றுக்கொண்டு வெளியில் செல்வதில் விருப்பமில்லை. எனவே இந்தச் சலுகையினைப் பெற வேண்டாம் என்று தான் அந்த மின்னஞ்சல் அனுப்பும். ஊழியர்களுக்குப் பணமா, வேலையா என்பதை உணர்த்தவே இந்தச் சலுகை திட்டம் அளிக்கப்படுகிறது என்றும் கூறுகிறது.