மும்பை: கடந்த ஒரு மாத்தில் மட்டும் 15 தணிக்கையாளர்கள் தணிக்கைத் தரவுகளின் தரத்தினைக் கூட்டாமல் பங்குடந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் இது வரை 32 தணிக்கையாளர்கள் ராஜினாமா செய்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
பிரைம் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களின் படி ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் 32 தணிக்கையாளர்கள் தங்களது பணி காலத்தின் இடையிலேயே ராஜினாமா செய்துள்ளனர். இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 36 நபர்களும், 2016-2017 நிதி ஆண்டில் 18 தணிக்கையாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமாவிற்கான காரணங்கள்
தணிக்கையாளர்கள் ராஜினாமா செய்ய முக்கியக் காரணங்களாக நிறுவனத்தின் வணிகங்கள், வருவாய்கள், மியூச்சுவல் ஃபண்டு வெளியேற்றம் குறித்த வரிப் பரிவர்த்தனை குறித்த விவரங்கள் பற்றாக்குறையே காரணம் எனக் கூறுகின்றனர்.
சில தணிக்கையாளர்கள் உடல் நல குறைவு மற்றும் முந்தைய வேலை போன்ற காரணங்களாலும் ராஜினாமா செய்துள்ளனர். சில இடங்களில் தணிக்கை நிறுவனங்களும் வெளியேறியுள்ளன.
கார்ப்ரேட் அமைச்சகம்
தணிக்கை அதிகாரிகள் போதுமான தகவல்கள் இல்லாததால் அல்லது தவறான அறிக்கையில் இருந்து நிதி அறிக்கைகள் பற்றி நியாயமான உத்தரவாதத்தைப் பெற முடியாத காரணங்களால் வெளியேறுவதாக நிறுவனங்கள் விவகார துறை அமைச்சகத்தினைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
புதிய தணிக்கையாளர்கள்
புதிய தணிக்கையாளர்களைப் பணிக்கு எடுக்கும் போதும் தேவையான ஆவணங்கள் ஏதுமில்லாமல் தவிக்கின்றனர். புதிய தணிக்கையாளர்களைப் பணிக்கு எடுத்த சில நிறுவனங்களின் நிலை இது ஆகும்.
முதலீட்டாளர்கள்
தணிக்கையாளர்கள் அறிக்கையே முதலீட்டாளர்களின் முக்கிய ஆயுதம். தணிக்கையாளர்கள் நிறுவனத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும். ராஜினாமா செய்வது எல்லாம் தீர்வு அல்ல என்று பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிதி மற்றும் கட்டுப்பாட்டின் பேராசிரியர் ஆர். நாராயணசுவாமி கூறுகிறார்.
பொய் காரணங்கள்
அது மட்டும் இல்லாமல் உடல் நல குறைவு என்று பொய் காரணங்களைக் கூறாமல் நிறுவனத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவிட்டு ராஜினாமா செய்தாலும் அதற்கான தீர்வுகளைக் காணலாம் என்றும் கூறுகின்றனர்.
தணிக்கையாளர்கள் ராஜினாமா தரவு
2012-2013 நிதி ஆண்டில் 6, 2013-2014 நிதி ஆண்டில் 11, 2014-2015 நிதி ஆண்டில் 11, 2015-2016 நிதி ஆண்டில் 15, 2016-2017 நிதி ஆண்டில் 18, 2017-2018 நிதி ஆண்டில் 36 மற்றும் ஜனவரி - மே 2018 வரை 32 தணிக்கையாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சிக்கல்
தணிக்கையாளர்களின் ராஜினாமா என்பது இப்படியே தொடர்ந்தால் முதலீட்டாளர்ள் நிலை திண்டாட்டம் ஆவது மட்டும் இல்லாமல் நிறுவனங்களும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும்.