இந்திய மக்கள் மத்தியில் ராயல் என்பீல்டு வாகனங்களுக்குத் தனி மரியாதையும், ரசிகர்களும் உண்டு. இந்நிறுவனம் 2018ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
பிரீமியம் பைக்குகள்
இந்தியாவில் பிரீமியம் மோட்டார் வாகனங்கள் அதாவது 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் வாகனங்களின் வர்த்தக வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையிலும் ராயல் என்பீல்ட் இப்பிரிவில் சுமார் 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
5 சதவீத வர்த்தகம் மட்டுமே
இந்தியாவில் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் பிரீமியம் வாகனங்களுக்கான சந்தை 5 சதவீதம் மட்டுமே இருந்தாலும், உலகளவில் அதிகப் பிரீமியம் பைக்குகள் விற்பனை செய்யும் நாடு இந்தியாவாகத் தான் உள்ளது.
பவர்புல் பைக்
மக்கள் மத்தியில் தற்போது பவர்புல் பைக்குகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் இந்த 5 சதவீதம் என்பது கூடிய விரைவில் அதிகரிக்கும் என ஆட்டோமொபைல் சந்தை வட்டாரம் கூறுகிறது.
20 சதவீத வளர்ச்சி
மேலும் உலகளவில் 150சிசி சக்தி கொண்டு இரு சக்கர வாகனங்களில் வர்த்தக வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இதன் அளவு 20 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
நிதித்துறை
இந்தியாவில் தற்போது வாகனங்களுக்கான நிதியுதவி எளிதாகக் கிடைக்கும் நிலையில் இளைஞர்கள் எளிதாகப் பிரீமியம் மற்றும் ஹைய் பர்பாமென்ஸ் வாகனங்களை வாங்கி வருகின்றனர். நிதித்துறையில் வளர்ச்சியின் வாயிலாகவே ஆட்டோமொபைல் சந்தை தற்போது பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
வளர்ச்சி
ராயல் என்பீல்ட் கடந்த வருடம் இந்தியா முழுவதும் 8 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த நிலையில் 2018ஆம் நிதியாண்டில் 10 லட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளது.