இந்தியாவில் உள்ள கார்ப்ரேட் நிறுவனங்களைச் சுத்தம் செய்யும் நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த அதிரடி திட்டத்தினை அமல்படுத்து உள்ளதாகவும், அதன் மூலம் போலி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கு முடிவு கட்டப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கார்ப்ரேட் நிறுவன முதலாளிகள்
கார்ப்ரேட் நிறுவன முதலாளிகள் தங்களது கேஓய்சி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
தேவையான கேஒய்சி விவரங்கள்
இந்தக் கேஒய்சி திட்டத்தின் கீழ் நிறுவனர்கள் தங்களது பாஸ்போர்ட், பான் எண் மற்றும் தொடர்பு விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இனி புதுப்பிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
நிறுவன முகவரி
கேஒய்சி புதுப்பித்தல் விவரங்கள் மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் முகவரி குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் செயலாளர்கள் புதுப்பிக்க வேண்டும். இதனால் போலி நிறுவனங்களை எளிமையாகக் கையாள முடியும் என்று கூறப்படுகிறது.
33 லட்சம் முதலாளிகள்/ இயக்குனர்கள்
மத்திய அரசு இந்த முடிவினை அமலுக்குக் கொண்டு வரும் போது நாடு முழுவதிலும் இருந்தும் 33 லட்சம் நிறுவன இயக்குனர்கள் தங்களது கேஒய்சி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
வெளிநாட்டு முதலாளிகள்
வெளிநாட்டு நிறுவன இயக்குனர்கள் அமைச்சகத்தில் ஏற்கனவே தங்களது கேஒய்சி விவரங்களைச் சமர்ப்பித்து இருந்தாலும் அவர்களுக்கான தனிப்படிவமும் தயாராகி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
யார் தாக்கல் செய்ய வேண்டும்?
இரண்டு படிவங்களிலும் நிறுவனத்தின் முகவரி மற்றும் பிற தேவையான விவரங்களைத் தவிக்காமல் பட்டய கணக்காலர் அல்லது நிறுவனத்தின் செயலாளர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை வரும்.
ஏன்?
நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோர் செய்த மோசடிகளை அடுத்து மத்திய அரசு இந்தப் புதிய கேஒய்சி திட்டத்தினை விரைவில் அமலுக்குக் கொண்டு வர இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.