வருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால் வந்த புதிய தலைவலி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: கருப்புப் பணம், வரி ஏய்ப்புக் குறித்துத் தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாக வருமான வரித் துறை அறிவித்து இருந்தது. இதற்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பரிசு என்று இருந்த நிலையில் தற்போது தொலைப்பேசி அழைப்பு, கொரியர்கள் மற்றும் மின்னஞ்சல் வந்து குவிகின்றனவாம்.

குவியும் புகார்கள்

குவியும் புகார்கள்

பரிசு தொகையினை 5 கோடி ரூபாய் ஆக அறிவித்த பிறகு ஜூன் 1ம் தேதி முதல் வருமான வரித் துறை கமிஷ்னர்கள் முதல் அனைவருக்கும் புகார்கள் வந்து குவிய துவங்கியுள்ளது.

பரிசு தொகை

பரிசு தொகை

இந்தியாவில் கருப்புப் பணம் வைத்து இருப்பவர்கள் குறித்த விவரங்களை அளித்தால் 5 கோடி ரூபாய் வரையிலும், முறைகேடாக வெளிநாட்டுச் சொத்துக்களை வைத்து இருப்பது குறித்த தகவல்களை அளிக்கும் பொது 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாகவும் வருமான வரித் துறை சென்ற வாரம் அறிவித்து இருந்தது.

ஒரு வாரத்தில் 500 அழைப்புகள்

ஒரு வாரத்தில் 500 அழைப்புகள்

இந்தப் பரிசு தொகை அறிவிப்பினை அடுத்து ஒரு வாரத்தில் மட்டும் 500 தொலைப்பேசி அழைப்புகள் அதற்காக வந்துள்ளதாகவும் மத்திய நேரடி வரித் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

தேவையில்லாத அழைப்புகள்

தேவையில்லாத அழைப்புகள்

வருமான வரி துறைக்கு அதிகளவில் தேவையில்லாத அழைப்புகளும், கொரியர்களில் வரி விலக்கு உள்ள வருவாய் குறித்த விவரங்கள் எல்லாம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 விசாரணை

விசாரணை

புகார்களாக வரும் மின்னஞ்சல் மற்றும் கடிதங்களை நாங்கள் ஆய்வு செய்து விசாரணை துறைக்கு அனுப்பி வருவதாகவும் அதிகாரி ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். இதில் சில புகார்கள் 500 பக்கங்களுக்கும், நீதிமன்ற வழக்கு குறித்த ஆவணங்களுடன் வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

தலைவலி

தலைவலி

பரிசு திட்டத்திற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கும் அளித்தாலும் மிகப் பரிய தலைவலியாக உள்ளதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

..." data-gal-src="http:///img/600x100/2017/02/12-1478940435-rs-2000-3-13-1486987619.jpg">
ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?

ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?

<strong>ஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?<br /></strong>ஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 5 crore reward scheme becomes headache for Income Tax Dept

Rs 5 crore reward scheme becomes headache for Income Tax Dept
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X