இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பொதுத்துறை வங்கிகள் 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 87,357 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்து உள்நாட்டு முதலீட்டாளர்களும், அன்னிய முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
முதல் இடம்
அதிக நஷ்டம் அடைந்த வங்கிகள் பட்டியலில் 12,283 கோடி ரூபாய் உடன் பஞ்சாப் நேஷனல் வங்கி முதல் இடத்தையும், 2வது இடத்தை ஐடிபிஐ வங்கியும் பிடித்துள்ளது.
21 பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் இருக்கும் 21 பொதுத்துறை வங்கிகளில் வெறும் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தைப் பெற்றுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை மட்டுமே லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதில் இந்தியன் வங்கி 1,258.99 கோடி ரூபாயும், விஜயா வங்கி 727.02 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. மீதமுள்ள 19 பொதுத்துறை வங்கிகளும் 87,357 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது
பஞ்சாப் நேஷனல் வங்கி
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில் 2018-17ஆம் நிதியாண்டில் இவ்வங்கியின் மொத்த நஷ்டம் 12,282.82 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் இவ்வங்கி 1,324.8 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடிபிஐ வங்கி
பிஎன்பி வங்கியைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கி 8,327.93 கோடி ரூபாய் நஷ்டத்துடனும் அதிக நஷ்டம் அடைந்த பொதுத்துறை வங்கிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.