பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015-ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் முறைப்படுத்தப்படாத துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபத்தினைப் பெறலாம்.
தனிநபர் ஒருவரால் இந்தத் திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 1000 முதல் 5000 ரூபாய் வரை வருவாய் பெற முடியும். லாபமானது முதலீட்டாளர்களின் வயது மற்றும் பங்களிப்பினை பொருத்து மாறும்.
மாதம் 84 ரூபாய் முதலீடு
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மாதம், காலாண்டு மற்றும் அரையாண்டு என மூன்று விதங்களில் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம். எனவே மாதம் குறைந்தது 84 ரூபாய் என முதலீட்டினை செய்யத் துவங்கினால் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் பெற முடியும்.
மாதம் 84 ரூபாய் என 42 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் 24,000 ருபாய் எனப் பென்ஷன் பெற முடியும். இதற்குத் தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிகளில் சேமிப்பு கணக்கு ஒன்றைத் துவங்கினால் போதுமானதாக இருக்கும்.
வயது | பங்களிப்பை செலுத்த வேண்டிய வருடங்கள் | மாதம் 1000 ரூபாய் பென்ஷன் | மாதம் 2000 ரூபாய் பென்ஷன் | மாதம் 3000 ரூபாய் பென்ஷன் | மாதம் 4000 ரூபாய் பென்ஷன் | மாதம் 5000 ரூபாய் பென்ஷன் |
---|---|---|---|---|---|---|
18 | 42 | 42 | 84 | 126 | 168 | 210 |
19 | 41 | 46 | 92 | 138 | 183 | 228 |
20 | 40 | 50 | 100 | 150 | 198 | 248 |
21 | 39 | 54 | 108 | 162 | 215 | 269 |
22 | 38 | 59 | 117 | 177 | 234 | 292 |
23 | 37 | 64 | 127 | 192 | 254 | 318 |
24 | 36 | 70 | 139 | 208 | 277 | 346 |
25 | 35 | 76 | 151 | 226 | 301 | 376 |
26 | 34 | 82 | 164 | 246 | 327 | 409 |
27 | 33 | 90 | 178 | 268 | 356 | 446 |
28 | 32 | 97 | 194 | 292 | 388 | 485 |
29 | 31 | 106 | 212 | 318 | 423 | 529 |
30 | 30 | 116 | 231 | 347 | 462 | 577 |
31 | 29 | 126 | 252 | 379 | 504 | 630 |
32 | 28 | 138 | 276 | 414 | 551 | 689 |
33 | 27 | 151 | 302 | 453 | 602 | 752 |
34 | 26 | 165 | 330 | 495 | 659 | 824 |
35 | 25 | 181 | 362 | 543 | 722 | 902 |
36 | 24 | 198 | 396 | 594 | 792 | 990 |
37 | 23 | 218 | 436 | 654 | 870 | 1,087 |
38 | 22 | 240 | 480 | 720 | 957 | 1,196 |
39 | 21 | 264 | 528 | 792 | 1,054 | 1,318 |
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு அனைத்து முக்கிய வங்கிகளின் இணையதளப் பக்கங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதனைப் பதவிறக்கம் செய்து அச்சிட்டுப் பூரித்துச் செய்து வங்கிகள் கேட்கும் பிற அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து அடல் பென்ஷன் யோஜனா கணக்கினை துவங்கலாம்.
தவணையைத் தாமதமாகச் செலுத்துதல்
அடல் பென்ஷன் யோஜானா திட்ட முதலீட்டுத் தவணையினைத் தாமதமாகச் செலுத்தினால் அதற்கு 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
100 ரூபாய் வரை தாமதமாகச் செலுத்தும் போது 1 ரூபாயும், 101 முதல் 500 ரூபாய் வரை தாமதமாகச் செலுத்தும் போது 2 ரூபாயும், 501 முதல் 1000 ரூபாய் வரை தாமதமாகச் செலுத்தும் போது 5 ரூபாயும், 1001 ரூபாய்க்கும் அதிகமாகத் தாமதமாகச் செலுத்தும் போது 10 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
கணக்கு ரத்து
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடுகளைச் செய்யத் துவங்கிய பிறகு 6 மாதம் தவணையினைச் செலுத்தத் தவறினால் கணக்கு உறை நிலைக்குச் சென்றுவிடும். 12 மாதங்களுக்குப் பிறகு கணக்கு செயல்படாது. 24 மாதங்களுக்குப் பிறகு கணக்கு ரத்தாகிவிடும்.
பணத்தைத் திரும்பப்பெறுதல்
முதலீட்டாளருக்கு வயது 60 ஆன போது ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும். 60 வயது நிரம்பிய பிறகு தான் பென்ஷன் பணத்தினைப் பெற முடியும்.
இறப்பு
ஒருவேலை முதலீட்டாளர்கள் இறக்க நேர்ந்தால் அவரினை சார்ந்து உள்ளவர்களால் பென்ஷனை பெற முடியும். எதிர்பாரா விதமாக முதலீட்டாளர் மற்றும் அவரைச் சார்ந்து இருந்தவர் இருவரும் மறைந்தால் பென்ஷன் திட்டத்தின் கார்பஸ் பணம் நாமினிக்கு சென்று சேறும்.
இடையில் வெளியேறுதல்
முதலீட்டாளர் 60 வயது நிரம்புவதற்கு முன்பே வெளியேற விரும்பினால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுவே முதலீட்டாளர் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவிற்குத் தேவை இருக்கும் போது மட்டுமே இடையில் வெளியேற முடியும்.
தகுதி
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் முதலீடு செய்யலாம். ஆதார் மற்றும் மொபைல் தான் இவர்களுக்கான முக்கிய வாடிக்கையாளர் அடையாள ஆவணமாக இருக்கும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினைத் துவங்கும் போது ஆதார் எல்லை என்றாலும் விரைவில் அதனைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.