ராகுல் காந்தி சொல்லும் கதை.. கோகோ கோலா, மெக் டொனால்டு நிறுவனங்களுக்கு புதிய வரலாறு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு வாய்ப்புகள் அளிப்பதில்லை எனக் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களிடம் ஞானம் இல்லாமல் இல்லை, அவர்களுக்கு வங்கியிலும், அரசியலிலும் மோடி அரசும், ஆர்எஸ்எஸ்-ம் வாய்ப்பு அளிப்பதில்லை என ராகுல் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கோகோ கோலா, மெக்டோனால்டு போன்ற நிறுவனங்களை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா..? அவர்கள் ஒரு காலத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா.. ? என ஒரு கதை செல்லியிருக்கிறார் பாருங்க வேற லெவல்.

ஒரு கதை சொல்டா சார்..!

ஒரு கதை சொல்டா சார்..!

எல்லோரும் கோகோ கோலா தெரிந்திருக்கும், இந்த நிறுவனத்தைத் துவங்கியவர் ஒரு காலத்தில் அமெரிக்காவில் ஷிகான்ஜி (லெமன்ஜூஸ்) விற்றுக்கொண்டு இருந்தார். அவர் தண்ணீரில் சர்க்கரையைக் கலந்து விற்று வந்தார். அவரது திறமையைப் பார்த்து அவருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுப் பின்னாளில் கோகோ கோலா என்னும் நிறுவனத்தை உருவாக்கினார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அட இதுமட்டுமா..?

 

 மெக்டொனால்டு

மெக்டொனால்டு

அதேபோல் நீங்கள் தற்போது இந்தியா முழுவதும் பார்க்கும் மெக்டொனால்டு கடையை உருவாக்கியவர் யார்? அவர் என்ன செய்துகொண்டு இருந்தார் தெரியுமா? அவர் ஆரம்பக் காலத்தில் தாபா வைத்திருந்தார்.

எந்தத் தாபா உரிமையாளராவது கோகோ கோலா, மெக்டொனால்டு போன்ற நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்கியுள்ளாரா எனக் காட்டுங்கள்.

 

 ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

இதுமட்டும் அல்ல.. போர்டு மோட்டார்ஸ், மெர்சிடீஸ் பென்ஸ், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் அனைத்தும் சாதாரண மெக்கானிக்-ஆல் உருவாக்கப்பட்டது தான்... எனக் கதையை அடுக்கிக்கொண்டே போனார்.

உண்மை என்ன தெரியுமா..?

கோகோ கோலாவின் உண்மை கதை

கோகோ கோலாவின் உண்மை கதை

கோகோ கோலா நிறுவனத்தை உருவாக்கியவர் ஜான் பெம்பர்டான், இவர் மார்பைன்-க்கு அடிமையாகி இருந்தார். கோகோ செடியில் இருந்து உருவாக்கப்பட்ட சாரை கோலா விதைகளுடன் சேர்த்து அதனுடன் கார்பனேட் தண்ணீர் உடன் கலக்கி கோகோ கோலா என்ற பெயருடன் விற்பனை செய்தார்.

தாபா உண்மை கதை

தாபா உண்மை கதை

1940இல் ரிச்சர்டு மற்றும் மொவ்ரைஸ் மெக்டொனால்டு கலிபோர்னியாவில் மெக்டொனால்டு என்னும் துரித உணவகத்தைத் துவங்கினார், அதன் பின்பு இந்நிறுவனத்தில் சேர்ந்த ரே கோர்க் பின்னாளில் மொத்த மெக்டொனால்டு நிறுவனத்தையும் வாங்கினார்.

 போர்டு மோட்டார்ஸ்

போர்டு மோட்டார்ஸ்

1903ஆம் ஆண்டு ஹென்றி போர்டு மற்றும் 11 பேர் சேர்ந்து இந்நிறுவனத்தை உருவாக்கினர். இதில் ஹென்றி போர்டு 1896ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் காரின் தயாரிப்பில் பயிற்சிபெறும் ஊழியராக இருந்தார்.

 மெர்சிடீஸ் பென்ஸ்

மெர்சிடீஸ் பென்ஸ்

இந்நிறுவனத்தை உருவாக்கிய கோட்லிப் டையாம்லர் வரைவாளராகவும், கார்ல் பென்ஸ் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியராகவும் தங்களது பணியைத் துவங்கினர்.

ஹோண்டா

ஹோண்டா

தந்தையின் சைக்கிள் ரீப்பேர் வர்த்தகத்தில் உதவி செய்து வந்த சோய்சிரோ ஹோண்டா கார் மெக்கானிக் ஆகத் தனது பணியைத் தொடர்ந்து பின்னாளில் ஹோண்டா நிறுவனத்தைத் துவங்கினார்.

 பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள்

பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள்

அவரது குற்றச்சாட்டு என்னவென்றால், தற்போதைய அரசு பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் வாய்ப்புகள் வழங்கவில்லை என்பதே. ஆனால் அவர் கூறிய கதைகள் அனைத்தும் பொய்.

 

 

 மத்திய அரசு

மத்திய அரசு

மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 15 தொழிலதிபர்களின் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shikanji seller started Coca Cola, dhabawallah McDonald’s: Fact Check on Rahul Gandhi

Shikanji seller started Coca Cola, dhabawallah McDonald’s: Fact Check on Rahul Gandhi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X