மத்திய அரசு 2018-2019 நிதி ஆண்டில் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் படுத்தியது போலப் பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவி திட்டத்தினை அறிமுகம் படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தினை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தி மத்திய அரசின் பிரதான் மந்திரி மட்ரித்வ வந்தன யோஜனா திட்டம் மூலம் செயல்படுத்தி வரும் நிலையில் தமிழ் நாடு, தெலுங்கானா, ஒதிசா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில அரசுகள் வேண்டாம் என்று மறுத்துள்ளன.
மத்திய அரசு
மத்திய அரசு இந்தத் திட்டத்தினை அறிமுகம் செய்ததில் இருந்து 23.6 லட்சம் பயனர்களுக்கு 673 கோடி ரூபாயினை அளித்துள்ளது.
மறுப்பு
பல மாநில அரசுகள் ஏற்கனவே இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு திட்டத்தினை வேண்டாம் என்றும் அதற்கான நிதியையும் பெறாமல் மறுத்துள்ளனர்.
தமிழ் நாடு
தமிழ் நாட்டில் தற்போது உள்ள அதிமுக அரசும் தெலுங்கானா அரசும் முதலில் இந்தத் திட்டத்தினை மறுத்து வந்த நிலையில் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே இந்த மகப்பேறு திட்டத்திற்கு இனி மத்தி அரசின் சமுக நல திட்டங்களின் கீழ் நிதி அளிக்கப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பெயர் மாற்றம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தத் திட்டத்தினைப் பிரதான் மந்திரி மட்ரித்வ வந்தன யோஜனா என்ற பெயரில் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்து இருந்தாலும் 2010-ம் ஆண்டே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்திரா காந்தி மட்ரித்வ வந்தன யோஜனா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
திருத்தம்
மாநில அரசுகள் மகப்பேறு திட்டம் மற்றும் காங்கிரஸ் அறிமுகம் செய்த திட்டங்கள் இரண்டு குழந்தைகள் வரை பெற உதவி அளிக்கப்பட்டு வந்த நிலையில் மோடி அரசு திட்டத்தில் ஒரு குழந்தைக்கு மட்டுமே என்றும் மாற்றியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள்
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்த அழுத்தம் தெரிவித்து வரும் நிலையில் புதிய திருத்தங்களை நீக்கிவிட்டு முன்பு இருந்தது போன்றே செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.