ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா? ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் முதன் முறையாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளின் முதலீட்டிற்கு உதவக் கூடிய மானிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

விவசாயிகளின் சகோதரர் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் அல்லது அதற்கும் கூடுதலான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8,000 ரூபாயினை மானியமாக அளிக்க முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா விவசாயிகள்

தெலுங்கானா விவசாயிகள்

எனவே தெலுங்கானா விவசாயிகள் இனி ஒவ்வொரு பயிற் பருவத்திற்கு முன்பும் 4,000 ரூபாயினை விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் பிற பொருட்களை வாங்க முதலீட்டு உதவியாகப் பெற முடியும்.

 நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

தெலுங்கானா முதல்வரான கே சந்திரசேகர ராவ் இந்தத் திட்டத்திற்காக 5,600 கோடி ரூபாய்க்கான காசோலையினை அளித்துள்ளார்.

விவாசாயிகளின் நண்பன் என்ற இத்திட்டத்தின் கீழ் மே 10-ம் தேதி வரை 5,400 கோடி ரூபாயினை விவசாயிகள் பெற்றுள்ளதாகவும், 1.42 கோடி ஏக்கர் நிலங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு அதிகாரியான கருணா தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

 

நிலம் அளவு பணிகள்

நிலம் அளவு பணிகள்

இந்தத் திட்டத்திற்காக நிலங்களை அளக்கும் பணியானது சென்ற ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்றுள்ளது. இதில் 72 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

பருவ காலம்

பருவ காலம்

நவம்பர் மாதம் துவங்கும் ரபி பருவ காலத்திலும் தெலுங்கானா அரசு விவசாயிகளுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகையினை அளிக்க உள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்காக விவசாயிகளுக்குச் சிறப்புப் பாஸ்புக் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர்.

வங்கி கணக்கில் பணம் அளிக்கப்படாது?

 

 எப்படி?

எப்படி?

விவசாயிகளுக்குத் தெலுங்கானா அரசு அளிக்கும் இந்த உதவித் தொகையானது வங்கி கணக்கு மூலம் அளிக்கப்படாது என்றும் செக் மூலமாகத் தான் ஆளிக்குப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று அதனைச் செலுத்தாமல் இருக்கும் நிலையில் முதலீட்டு உதவியாக அளிக்கப்படும் இந்தப் பணத்தினை வங்கிகள் தங்களது கடனுக்கு எடுக்க வாய்ப்புள்ளது. எனவே காசோலை வழியாகத் தான் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கேசிஆர்

கேசிஆர்

2018-2019 நிதி ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக 12,000 கோடி ரூபாயினை ஒதுக்க உள்ளதாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாடு

தமிழ் நாடு

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரச் சேவை வழங்குவது போன்று தெலுங்கானாவிலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க 1,000 கோடி ரூபாயினைக் கேசிஆர் ஒதுக்கியுள்ளார். இது போன்ற திட்டங்களைத் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தால் தமிழ் நாட்டு விவசாயிகளும் பயன்பெறுவார்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

First in the country, Chief Minister KCR launched an Farmers investment support scheme

First in the country, Chief Minister KCR launched an Farmers investment support scheme
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X