ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தை உயர்த்திய நிலையில், வணிக வங்கிகளும் தனது அடிப்படை வட்டி விகிதமான எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சிண்டிகேட் வங்கி எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியது மட்டும் அல்லாமல் ஒரு வருடக் கடனுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படை வட்டி விகித்தை உயர்த்தி 8.55 சதவீதமாக அறிவித்துள்ளது. இதேபோல் ஆந்திரா வங்கியும் 8.55 சதவீதமாக அறிவித்துள்ளது.
மேலும் ஐடிபிஐ வங்கி, ஒரு வருட, இரண்டு வருட வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதேபோல் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.