சர்வதேச பங்கு சந்தை ஆய்வு மற்றும் ப்ரோக்ரேஜ் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 44,000 புள்ளிகளைத் தொடும் என்று கணித்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி, லார்ஜ் கேப் மதிப்பீடுகள் மற்றும் குறைந்த பீட்டா சோதனைகள் போன்றவற்றால் இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உச்சத்தினை எட்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
2019 தேர்தல்
2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக அரசு தோல்வி அடைந்தால் பங்கு சந்தை 26,500 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
பாஜக வெற்றி பெற்றால்
இதுவே 2019 தேர்தலின் போது பாஜக வெற்றி பெற்றால் ஜிடிபி வளர்ச்சி, லார்ஜ் கேப் மதிப்பீடுகள் மற்றும் குறைந்த பீட்டா சோதனைகள் போன்றவற்றால் இந்திய பங்கு சந்தை 44,000 புள்ளிகளைத் தொடும் என்று குறிப்பிட்டுள்ளது.
எந்தத் துறைகளில் முதலீடு செய்யலாம்?
2019-ம் ஆண்டுப் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், நுகர்வோர் விருப்பம் மற்றும் தொழில்துறை பொருட்கள் போன்ற துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
வங்கி அல்லா துறைகளின் நிலை என்ன?
தனியார் துறை வங்கி நிறுவனங்கள் அதிக லாபம் அளிக்கும் என்று தெரிவித்துள்ள மார்கன் ஸ்டான்லி வங்கி மறு மூலதனம் மற்றும் வங்கி திவால் சட்டங்களில் ஏற்பட்டு வரும் திருத்தம் மற்றும் ஐபிசி போன்றவற்றால் பொதுத் துறை வங்கி நிறுவனங்களும் லாபம் அளிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், வங்கி அல்லாது துறைகளுக்கு மிகப் பெரிய மார்ஜின் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.