வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை வரி செலுத்துனர்களுக்குப் பான் கார்டு பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க இன்ஸ்டண்ட் இ-பான் கார்டினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு சேவையினை வருமான வரி துறையின் இணையதளம் கீழ் இந்திய தனிநபர் வருமான வரி செலுத்துனர்கள் பெறலாம் என்றும், இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனங்கள், சங்கங்களால் எல்லாம் பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த இன்ஸ்டண்ட் இ-பான் கார்டினை பெற ஆதார் ஒருமுறை கடவுச்சொல் உடன் வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டுப் பதிவேற்ற வேண்டும்.
இதனை எல்லாம் செய்த பிறகு உங்களுக்கு 15 இலக்க ஒப்புகை எண் ஒன்ற அளிக்கும். இதனைப் பயன்படுத்தி எளிதாக இன்ஸ்டண்ட் இ-பான் எண்ணை பெறலாம். இதனால் எப்போது பான் கார்டினை கையில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை மாறியுள்ளது.