இந்தியர்களுக்குத் தங்கம் மீது தீரா காதல் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும், தற்போது இதே காதல் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது முளைத்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திலும், வர்த்தகச் சந்தையிலும் புதிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள்
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் ஸ்மார்ட்போன், டிவி, மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தான்.
இறக்குமதி சந்தை
இப்படி இறக்குமதி சந்தையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது, இதனால் நாட்டின் நடப்பு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ரூபாய்
வர்த்தகப்பற்றாக்குறையின் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் 2018இல் 1.9 சதவீதமாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை 2019இல் 2.3 சதவீதமாக உயரும் எனத் தெரிகிறது.
மேக் இன் இந்தியா
இந்திய நுகர்வோர் சந்தை மிகப்பெரிதாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரித்தால், வர்த்தகப் பற்றாக்குறை பிரச்சனை தீரும்.