இந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் சேவை தொடங்க அனுமதிப்பிற்கான உரிமத்தினைப் புதன்கிழமை அளித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் உடன் சென்ற மாதம் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் கிளைகள் துவங்க அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டதனை அடுத்துத் தற்போது இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா போல் இல்லாமல் சீனாவில் பொதுத் துறை வங்கிகள் மிகவும் குறைவு என்ற நிலையில் அதில் பாங்க் ஆப் சீனாவும் ஒன்றாகும்.
இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை, பொருளாதாரச் சூழல் குறித்துப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவானது இரு நாட்டுடனான நல்லுறவை அதிகரிக்கும் படியாக அமைந்துள்ளது.
சென்ற ஆண்டு இரு நாட்டுக்களுக்கு இடையிலும் டோக்லம் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து பல்வேறு ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.