இந்திய ரயில்வே துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் திறன்வாய்ந்த, சமானியர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 160 கிலோமீட்டர் வேகம் செல்லும் ரயிலைச் சென்னையில் உள்ள கோச் பேக்ட்ரியில் தயார் நிலையில் உள்ளது.
டிரைன் 18
இந்த அதிவேக அதிநவீன ரயிலுக்கு டிரைன் 18 எனப் பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ரயில் ஜூன் மாதமே பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலதாமதமாகி செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.
வெறும் 16 மாதம்
வெளிநாடுகளில் 2 அல்லது 3 வருட காலத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில் சென்னையில் வெறும் 16 மாதத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது ஒரு உலகளாவிய சாதனை என ICF சென்னை தலைவர் சுதன்சு மணி தெரிவித்தார்.
என்ஜின் தேவையில்லை
டிரைன் 18க்கு என்ஜின் தேவையில்லை, மெட்ரோ ரயில் போல மின்சார சக்தியில் ஒவ்வொரு பெட்டியும் தானாக இயங்கிச் செல்லக்கூடியது. மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 50-80 கிலோமீட்டர் வரையிலேயே செல்லும் நிலையில், இந்த டிரைன் 18, 160கிலோமீட்டர் வேகத்தில் செல்ல உள்ளது.
முக்கிய ரயில்கள்
இந்த ரயில்கள் அடுத்தச் சில காலத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சாதாப்தீஸ் போன்ற முக்கியமான ரயில்களையும் மாற்றிவிடும். சென்னை ICF அதேபோல் 6 ரயில்களைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது.