2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை இந்திய நிறுவனங்கள் வெளியிடத் துவங்கியுள்ள நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய சந்தை பக்கம் திரும்பியுள்ளனர்.
இதற்கு ஏற்றார் போல் தனியார் வங்கித் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான இன்டஸ்இந்த் வங்கி அதிகளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
லாபம்
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இன்டஸ்இந்த் வங்கி சுமார் 1,035.7 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.836.5 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் 23 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கணிப்பு
இக்காலகட்டத்தில் இன்டஸ்இந்த் வங்கி மற்றும் பார்த் பைனான்சியல் நிறுவனத்துடனான இணைப்பு இவ்வங்கியின் லாபம் 46 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், 23 சதவீத வளர்ச்சி என்பது சற்று குறைவாகவே தெரிகிறது.
வட்டி வருமானம்
இண்டஸ்இந்த வங்கியின் வட்டி வருமானம் கடந்த வருடம் 1,774 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,122.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஹிந்துஜா குழுமம்
ஹிந்துஜா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இண்டஸ்இந்த வங்கி, நாட்டின் நடுத்தர வங்கி சேவையில் இருக்கும் முக்கியமான வங்கி. இவ்வங்கி ரோமேஷ் சோப்டி தலைமையில் இயங்கி வருகிறது.