இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய பெருமைக்குரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2018-2019 நிதி ஆண்டுக்கான ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டு அறிக்கையினைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் காலாண்டு அறிக்கையில் 7,340 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ரியூட்டர்ஸ் 7,014.30 கோடி ரூபாய் ஆக இருக்கும் என்று கணித்து இருந்தது. அதே நேரம் டிசிஎஸ்-ன் வருவாய் 6.8 சதவீதம் உயர்ந்து 34,261 கோடி ரூபாயாக உள்ளது.
வருவாய்
2017-2018 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனம் 6,904 கோடி ரூபாயினை நிகர லாபமாகவும், 32,075 கோடி ரூபாயினை வருவாய் ஆகவும் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேட்டிங் மார்ஜின்
சென்ற காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 25.4 சதவீதமாக இருந்த நிலையில் முதல் காலாண்டில் 25 சதவீதமாகச் சரிந்துள்ளது.
பங்குகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை இன்று வெளியாக இருந்த நிலையில் பங்குகள் விலை 10.5 புள்ளிகள் என 0.56 சதவீதம் சரிந்து 1,877 ரூபாய்க் காக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
வல்லுநர்கள்
வல்லுநர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் மார்ஜின் சரிவுக்கு ஊதிய உயர்வு, விசா செலவு உயர்வு, உள்ளூர் முதலீடுகள் போன்றவை காரணங்கள் எனத் தெரிவித்துள்ளன.