உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகிள், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கச் சிறப்புத் திட்டமாக லான்ச்பேட் ஆக்செலரேட்டர் என்னும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இதன் மூலம் மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது கூகிள், மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியா சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கவும் கூகிள் திட்டமிட்டுள்ளது.
மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு
இத்திட்டம் 3 மாதம் காலம் செயல்பட உள்ள நிலையில் இதன் வாயிலாக மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தளத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் இத்திட்டத்தின் வாயிலாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூகிள் கிளவுட் கிரெடிட்
மேலும் இத்திட்டத்தில் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்நிறுவனங்களுடன் கூகிள் அதிகாரிகள் ஆலோசனை செய்து வழிகாட்ட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு 1,00,000 டாலர் மதிப்பிலான கூகிள் கிளவுட் கிரெடிட் அளிக்கப்படுகிறது.