மத்திய அரசு இன்று கரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு 20 ரூபாய் ஏற்றி 275 ரூபாயாக அக்டோபர் மாதம் முதல் அளிக்க முடிவு செய்துள்ளது.
அன்மையில் மத்திய அரசு பருவ காலப் பயிர்களான அரசி, பருப்பு வகைகள் மீதான குறைந்தபட்ச விலையினையும் உயர்த்திய நிலையில் பொருளாதார விவகார துறை அமைச்சகம் 2019-2019 விற்பனை ஆண்டு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
விலை ஏற்றம்
2017-2018 விற்பனை ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு 255 ரூபாய் அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2018-2019 விற்பனை ஆண்டில் விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று 270 ரூபாயாக உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள்
மத்திய அரசு எப்ஆர்பி அடிப்படையில் கரும்புக்கான குறைந்தபட்ச விலையினை முடிவு செய்தாலும் அதிகக் கரும்பு உற்பத்திகள் செய்யும் மாநிலங்களான உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியான போன்றவற்றில் மாநில ஆலோசனை விலை கீழ் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச விலையினை விட மாநில அரசுகள் கூடுதலான விலையினைத் தான் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கரும்பு உற்பத்தி
அக்டோபர் மாதம் துவங்கும் அடுத்த விற்பனை ஆண்டு முதல் இந்தியாவின் கரும்பு உற்பத்தியானது 10 சதவீதம் அதிகரித்து 35.5 மில்லியன் டன்னாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பிரேசில்
2017-2018 விற்பனை ஆண்டில் பிரேசில் 32.25 மில்லியன் டன் கரும்பு உற்பத்தியினைச் செய்துள்ள நிலையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா முதல் இடம் பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.