இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய 100 ரூபாய் நோட்டின் மாதியை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒரு படம் இருப்பது போன்று புதிய 100 ரூபாய் நோட்டுகளில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய 100 ரூபாய் நோட்டில் பல மைக்ரோ பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும் இந்த ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஆர்பிஐ புழக்கத்திற்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதா நிறம்
மேலும் புதிய 100 ரூபாய் நோட்டு ஊதா நிறத்தில் இருக்கும் என்றும், புதிய நோட்டால் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் எப்போது போலப் பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அளவு
புதிய ரூபாய் நோட்டு பழைய நோட்டு பொன்று இல்லாமல் புதிய 10 ரூபாய் நோட்டினை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரங்கள்
எனவே வங்கிகளுக்கு மீண்டும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.
ராணி கி வாவ்
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் பின்புறம் ஒரு படம் இருப்பது போன்று புதிய 100 ரூபாய் நோட்டுகளில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருகிறது.
பார்வையற்றவர்கள்
பார்வையற்றவர்கள்ல் புதிய 100 ரூபாய் நோட்டினை அடையாளம் காண இரண்டு புறமும் 4 கோடுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தடவிப் பார்த்து புதிய 100 ரூபாய் நோட்டினை அடையாளம் காணலாம்.
தேவநாகிரி எழுத்து
தேவநாகிரி எழுத்து வடிவத்தில் 100 ரூபாய் என பொறிக்கப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் நடுவில் உள்ள நூழில் ஆர்பிஐ, பாரத், மற்றும் 100 உள்ளிட்டவை பொறிக்கப்பட்டு அவை நிறம் மாறும் படி அமைக்கப்பட்டு இருக்கும்.
பிற குறியூடுகள்
அஷோக்கா பில்லர் வலது பக்கமும், காந்தி புகைப்படம் னடுவிலும், 100 என எண்ணில் எலக்ட்ரோடைப் வாட்டர் மார்க்கும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
மொழிகள்
ராணி கி வாவ் படத்தினை ஒட்டு 15 மொழிகளில் 100 ரூபாய் என பொறிக்கப்பட்டு இருக்கும். அதில் தமிழ் மொழியில் 13 வது இடத்தில் 100 ரூபாய் என்று இருக்கும்.
தூயமை இந்தியா
ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா லோகோவும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
வீடியோ
வீடியோ